சிகரெட் தயாரிப்பில் புதிய அந்நிய முதலீடுகளுக்குத் தடை! - ப.சிதம்பரம்

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது என்று அவர் கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று இந்தக் கூட்டம் நடந்தது. இதில், பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "அந்நிய நேரடி முதலீட்டு கம்பெனிகள் சிகரெட்டை இந்தியாவில் தயாரிப்பதற்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு செய்து இருக்கிறது.
இது உள்நாட்டு உபயோகத்துக்காக இருந்தாலும் சரி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்குடன் தயாரிக்கப்பட்டாலும் சரி அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் சிகரெட் தயாரிக்கப்படுவது தடை செய்யப்படுகிறது.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும் இது பொருந்தும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தைச் சார்ந்த தொழிற் கொள்கை மற்றும் மேம்பாட்டு குழுவின் பரிந்துரையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது," என்றார்.
தற்போதைய நிலவரப்படி, சிகரெட் உற்பத்தியில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications