வதோதராவில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Three crude bomb explosions in Vadodara
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வதோதராவின் மஞ்சள்பூர் என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்ட்டத்தில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இன்று வெடித்தன. இதனால் வதோதராவில் பதட்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா கூறுகையில், இந்த குண்டுகள் நாட்டு வெடிகுண்டுகள்தான். இதனால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஒரு வெடிக்காத குண்டை கண்டுபிடித்து அதை செயலிழக்க செய்தோம்.

குண்டுகளை தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டுகள் எப்படி இங்கு வந்தன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றார் அவர்.

பத்து நிமிட இடைவெளியில் மூன்று குண்டுகளும் பலத்த சப்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+