காஞ்சிபுரத்தில் அதிமுகவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப்பகலில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் புஞ்சை ரசந்தாங்கல் கிராமத்தில் அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணனும், காஞ்சிபுரம் யூனியன் ஒன்றியத் தலைவராக இருந்த ஸ்ரீதரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் இருவரும் ரியல் எஸ்டேட், சாராய வியாபாராம், கட்டப் பஞ்சாயத்து என கூட்டாக செய்து வந்தனர்.
இவர்களுக்குள் ஏற்பட்ட மன வருத்தத்தில் பிரிந்தனர். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக இவரை ஏற்கனவே 4 முறை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்து வந்தது.
இன்று இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்பில் வந்த 6 பேர் கொண்ட ஒரு கும்பல் கிருஷ்ணனை கொலை செய்துவிட்டு தப்பியது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications