தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்சம் மதிப்பிலான காலாவதி மருந்துகள் எரிப்பு

தென்காசி அருகே உள்ளது இலத்தூர். இவ்வூரில் தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அச்சன்புதூர், வாவா நகரம், சீவநல்லூர், கணக்காபிள்ளை வசலை, குத்துக்கல்வலசை உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இங்கு வந்து பல்வேறு நோய்களுக்கு உள் நோயாளியாகவும், வெளி நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்து மாத்திரை, பிரஷர் மாத்திரை, சர்க்கரை நோய் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் சிறந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒன்று எனப் பெயர் பெற்றது இந்த ஆரம்ப சுகாதார நிலையம்.
இந்த சுகாதார மையத்தி்ன் வளாகத்தில் கலாவதியான மருந்து, மாத்திரைகள் ஊசிமருந்துகள், வைட்டமின் மாத்திரைகளை மூட்டையாக தீ வைத்து எரித்துள்ளனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தீ வைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருந்து வினியோகம் செய்பவர்களிடம் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications