தூத்துக்குடி: விசைப்படகில் மீன் பிடிக்க 45 நாட்களுக்கு தடை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை 45 நாட்களுக்கு விசைப் படகில் சென்று மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

ஓவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு விசைப்படகி்ல் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம்.

இத்தடை விதிக்கப்பட்ட 45 நாட்களிலும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டிருக்கும்.

இந்த ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகவும், மீன் வளத்தை கூட்டுவதற்காகவும் இத்தடை விதிக்கப்படுகிறது.

வரும் 15ம் தேதி முதல் இந்த மீன்பிடி காலம் அமல்படுத்தப்படுகிறது. அடுத்த மாதம் 29ம் தேதி வரை இத்தடை நீடிக்கும்.

இதனால் விசைப்படகுகள் தூத்துக்குடி கடல் பகுதிக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. ஆனால் நாட்டு படகுகள் மற்றும் கட்டுமரங்களுக்கு இந்த தடை பொருந்தாது என மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்படுவதால் அரசு நிவாரணமாக ரூ.500 வழங்குகிறது.

ஆனால் இந்த நிவாரண தொகையை 45 நாட்களுக்கு ரூ.4500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+