தான்டேவாடா சிஆர்பிஎப் வீரர்கள் படுகொலை - .ராம் மோகன் கமிட்டி விசாரணை தொடக்கம்

நாட்டையே உலுக்கிய இந்தக் கோரப் படுகொலைகள் குறித்து விசாரிக்க முன்னாள் பி.எஸ்.எப் தலைவர் ராம் மோகன் தலைமையில் மத்திய அரசு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.
இந்தக் கமிட்டி இன்று தனது விசாரணையைத் தொடங்கியது. சிஆர்பிஎப் வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி உள்ளிட்ட விவரங்களை இந்தக் குழு திரட்டுகிறது.
விசாரணை முடிவடைந்த்தும் ஏப்ரல் 24ம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிடம் இக்குழு சமர்ப்பிக்கும்.
கிராமத்தைக் காலி செய்த மக்கள்
இதற்கிடையே தான்டேவாடா கிராமத்திற்கு அருகில் உள்ள முக்ரானா கிராம மக்கள் காலி செய்து விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்தக் கிராமத்தில் 1200 பழங்குடியின மக்கள் வசித்த வருகின்றனர். தற்போது இங்கு அதிரடி கமாண்டோப் படையினர் குவிந்து வருகின்றனர்.
இதனால் தாங்கள் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் அந்தக் கிராம்மே வெறிச்சோடியுள்ளது.












Click it and Unblock the Notifications