தண்ணீர் தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது இந்தியா– லஷ்கர் புதுப் புகார்
லாகூர்: இந்தியா தண்ணீர் தீவிரவாதத்தில் ஈடுபட்ட்டு வருகிறது. இதை அது நிறுத்திக் கொள்ளாவிட்டால் தண்ணீருக்காக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டாலும் வியப்பதற்கில்லை என்று கூறியுள்ளார் லஷ்கர் இ தொய்பா நிறுவனரான ஹபீஸ் முகம்மது சயீத்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சயீத் மீது நடவடிக்கை எடுக்குமாறு தொடர்ந்து இந்தியா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகிறார்.
இநத நிலையில், இந்தியா மீது புதுப் புகாரை சுமத்தியுள்ளார் சயீத். மேலும் இந்தியா, பாகிஸ்தான் இடையே தண்ணீருக்காக போர் மூளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் லாகூரில் உள்ள செளபர்ஜி என்ற மசூதியில் நடந்த கூட்டத்தில் பேசுகையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே அடுத்து தண்ணீருக்காகத்தான் சண்டை மூளும். இந்தியா தண்ணீர் தீவிரவாதத்தை கையில் எடுத்துள்ளது. அதை அது கைவிட வேண்டும். இல்லாவிட்டால் போரைத் தவிர்க்க முடியாது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஓடும் ஆறுகளை தனது பகுதிக்குள்ளேய இருக்குமாறு தடுத்து வருகிறது இந்தியா. அணைகளையும், கால்வாய்களையும் அது அமைத்து பாகிஸ்தானை பாலைவனமாக்க முயலுகிறது. இதனால் இப்பிராந்தியத்தின் அமைதி கெடும் அபாயம் எழுந்துள்ளது.
இந்தியாவின் இந்த செயல் தீவிரவாதத்திற்குச் சமம். இதை எதிர்த்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மக்கள் திரள வேண்டும். அணைகள் கட்டுவதையும், ஆறுகளின் போக்கை மாற்றுவதையும் தடுத்து நிறுத்த முயல வேண்டும் என்றார் சயீத்.
சயீத்தின் லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு சர்வதேச அளவில் தடை உள்ளதால் தனது அமைப்பின் பெயரை ஜமாத் உத் தவா என்று மாற்றி அதன் தலைவராக நீடிக்கிறார் சயீத் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications