விழுப்புரம் மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் பொன்முடி திடீர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று ஆய்வு மேற்கொண்டார்.கடந்த வாரம் இந்திய மருத்துவக் கவுன்சில் குழு விழப்புரம் மருத்துவமனைக்கு வந்தது.
புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, பிணவறை மற்றும் கல்லூரியின் வகுப்பறைகள், குடிநீர், கழிவு நீர் வசதி ஆகியவற்றை அக்குழுவினர் ஆய்வு செய்தனர். இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடந்த இந்த ஆய்வின் போது பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.
இம்மாத இறுதியில் வரும் போது அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியில் ஆய்வு நடத்தினார்.
பணிகள் முறையாக நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக அமைச்சர் இந்த ஆய்வை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications