சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் அடித்து நொறுக்கப்பட்டன
கோல்கத்தா: விபத்தில் அடிபட்ட நோயாளிகளை முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்க மறுத்த மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டது.
தெற்கு கோல்கத்தா நகரில் பியர்லெஸ் மருத்துவமனை அருகே இன்று விபத்து ஏற்பட்டது.
மூன்று பேரை பலிகொண்ட இந்த விபத்தில் கடுமையாக காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களை பியர்லெஸ் மருத்துவமனையில் சேர்க்க உறவினர்கள் முயன்றனர்.
ஆனால், மருத்துவமனை நிர்வாகிகள் காயமடைந்தவர்களை சேர்க்க மறுத்துவிட்டனர்.
இதையடுத்து இதே மருத்துவமனையின் மற்றொரு பிரிவில் கொண்டு போய் சேர்க்க முயன்றனர். அங்கும் மருத்துவர்கள் அனுமதி மறுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், கும்பலாக சேர்ந்து இரண்டு மருத்துவமனைகளையும் அடித்து நொறுக்கினர்.
மருத்துவமனைகளில் இருந்த வாகனங்கள், மரச்சாமான்கள், மேஜை இருக்கைகள், ஸ்ட்ரெச்சர்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் அடித்து நொறுக்கினர்.
மருத்துவமனையின் உள்ளே இருந்த கேன்டீனையும் கும்பலைச் சேர்ந்தவர்கள் துவம்சம் செய்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மறுத்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மருத்துவமனை நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications