யூலிப் திட்டங்களுக்கு இனி செபியின் முன் அனுமதி அவசியம்!- புதிய அறிவிப்பு
மும்பை: இனி புதிதாக அறிவிக்கப்படும் யூலிப் திட்டங்களுக்கு தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவித்துள்ளது செபி.
பங்குச் சந்தை தொடர்பான யூலிப் காப்பீட்டுத் திட்டங்களை தங்களிஷ்டப்படி வெளியிட்டு வருவாய் திரட்டி வருகின்றன தனியார் காப்பீட்டு நிறுவனங்கள். இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் 14 தனியார் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது செபி. ஆனாலும் அவை யூலிப் பாலிசி விற்பதைத் தொடர்ந்தன. எனவே 14 தனியார் காப்பீட்டு நிறுவனங்களும் இத்தகைய பாலிசிகளை விற்க அதிரடித் தடை விதித்தது செபி.
ஆனால் செபியின் இந்தத் தடையை எதிர்த்தது காப்பீட்டு நிறுவனங்களைக் கண்காணிக்கும் ஐஆர்டிஏ.
இந்த திடீர் மோதலைத் தொடர்ந்து மத்திய அரசு பிரச்சினையில் தலையிட்டது. எனவே தடையை விலக்கிக் கொள்வதாக செபி அறிவித்தது.
இப்போது புதிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது செபி. இதன்படி, ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு, யூலிப் சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை அறிவிக்கும் தனியார் நிறுவனங்கள் செபியிடம் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்றும், அப்படி பெறாமல் அறிவிக்கப் படும் திட்டங்கள் செல்லாது என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications