தமிழகத்தில் 1.28 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ரூ.2,822 கோடி நிதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழகத்தில் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1.28 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ரூ.2,822 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.2822.32 கோடி செலவில் 1,28,024 வீடுகள் கட்ட மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் நகர்ப்புற ஏழைகளுக்கான அடிப்படை சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2009 டிசம்பர் வரை ரூ.34,775.86 கோடி மதிப்பிலான 1325 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications