டெல்லி சென்ற ரயிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழப்பு
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு வந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்லீப்பர் கோச்சின் கழிவறையில் கிடந்த பார்சலில் சிவப்பு நிறத்தில் சிறிய வெளிச்சம் மினுக் மினுக்கென்று வெளியானதை கண்டதும் பயணிகள் இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் மெஹோபா நகரில் இருந்து நேற்று இரவு புறப்பட்டு டெல்லி, நிஜாமுதீனை நோக்கி சென்று கொண்டிருந்த சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவு நேரத்தில் இந்த பதட்டம் உருவானது.
தகவல் அறிந்த பின் பல மணி நேரம் கழித்து அலகாபாத்தில் இருந்து வெடிகுண்டு செயலிழக்கும் நிபுணர்கள் வந்தனர்.
வெடிகுண்டு இருந்த பெட்டி மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது. இதன் பின் நிபுணர்கள், கழிவறையில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
நீண்ட முயற்சிக்கு பின்னர், தனியிடத்தில் வைக்கப்பட்டு லேசான வெடிச்சத்தத்துடன் அந்த குண்டு செயலிழக்கப்பட்டுவிட்டது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வெடிகுண்டு எத்தகையது, யார் இதை வைத்தது, பின்னணி என்ன என்பது பற்றிய தகவல்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications