பிரேசிலில் மன்மோகன் சிங் - இரண்டு மாநாடுகளில் பங்கேற்பு!
Subscribe to Oneindia Tamil
பிரெசிலியா: வாஷிங்டனில் அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் பிரேசில் வந்துள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான இரண்டு மாநாடுகள் பிரேசிலில் நடக்கின்றன.
இந்தியா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டமைப்பான 'இப்சா' (IBSA) மாநாடு இன்று நடக்கிறது.
இதைத்தொடர்ந்து பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான 'பிரிக்' (BRIC) மாநாடு நாளை நடக்க உள்ளது.
இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாடுகளில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார்.
பிரேசில் தலைநகர் பிரெசிலியாவுக்கு நேற்று வந்து சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங்கை பிரேசில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜோபிம் வரவேற்றார்.












Click it and Unblock the Notifications