முஷாரப் நினைத்திருந்தால் பெனாசிரை காப்பாற்றியிருக்க முடியும் - ஆனால் செய்யத் தவறி விட்டார்: ஐ.நா

சிலி நாட்டுத் தூதர் ஹெரால்டோ முனோஸ் தலைமையிலான 3 பேர் கொண்ட ஐ.நா. குழு பெனாசிர் பூட்டோ மரணம் குறித்து விசாரித்தது. இந்தக் குழு தனது அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது.
அதில் முஷாரப் நினைத்திருந்தால் இந்தப் படுகொலையைத் தடுத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்...
பாகிஸ்தானுக்குத் திரும்பிய பிறகு பெனாசிர் பூட்டோவை காக்கத் தவறியது முஷாரப் அரசு. அதேபோல அவரது மரணத்திற்குப் பின்னரும், அதுகுறித்து முறையாக விசாரிக்கவும் அது தவறி விட்டது.
பெனாசிருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் இருந்தன. அதுகுறித்து அரசுக்கும் தெரியும். ஆனாலும், அவரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முஷாரப் அரசு எடுக்கவில்லை.
பெனாசிரின் பாதுகாப்பு குறித்து முஷாரப் அரசில் இருந்த அதிகாரிகள் கவலைப்படவே இல்லை. கொலைக்குப் பின்னரும் கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அக்கறை காட்டவே இல்லை.
பெனாசிர் பூட்டோவின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை பஞ்சாப் மாகாண அரசும், ராவல்பிண்டி மாவட்ட போலீஸாரும்தான் அன்றைய தினம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மிகப் பெரிய அளவிலான கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் பெனாசிரின் பாதுகாப்பை பலப்படுத்த அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு பெனாசிர் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து 2009ம் ஆண்டு இதுகுறித்து விசாரிக்க ஐ.நா. சார்பில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தரப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும் இக்குழுவுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் தரப்பட்டிருந்த்து.
.தற்போது விசாரணையை முடித்து விட்ட குழு தனது அறிக்கையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் வழங்கியுள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications