மேலும் ஒரு நிறுவனம் மூடல்: தொடரும் நிதி மோசடிகள்!
சென்னை: பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய நிதி நிறுவனம் சமீபத்தில் மூடப்பட்டது.
சமீப நாட்களில் மூடப்பட்ட மோசடி நிதி நிறுவனங்களில் இது 5 வது நிறுவனமாகும்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோல்டன் மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் 25 கோடி ரூபாய் வரை மக்களிடம் மோசடி செய்து ஏமாற்றியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிறுவனம் 5 லட்சம் ரூபாய் கட்டினால் 2 மாதத்தில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று தெரிவித்திருந்ததை நம்பி மக்கள் பணத்தைக் கட்டியுள்ளனர்.
இந்நிலையில் பணத்தைச் சுருட்டிக் கொண்டு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்
ஓட்டம் பிடித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலிஸில் புகார் செய்துள்ளனர்.
இந்த நிறுவனம் கடலூர் மற்றும் புதுச்சேரியிலும் இது போன்று பல கோடி ரூபாயை மோசடி செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications