பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே 2 குண்டுகள் வெடிப்பு-8 பேர் காயம்

கும்ப்ளே சர்க்கிள் பகுதியில் உள்ள ஸ்டேடியத்தின் சுவரிலும், ஸ்டேடியத்தின் 12வது கேட்டின் அருகே ஜெனரேட்டர் அறைக்கு அருகே உள்ள சுவரிலும் இந்த குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கூறுகையில், இது குறைந்த சக்தி வாய்ந்த குண்டு. பிளாஸ்டிக் பையில் மறைத்து சுவரில் வைத்துள்ளனர். இதில் 3 போலீஸார் உள்பட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பீதியை ஏற்படுத்தும் வகையில இதைச் செய்துள்ளனர். இருப்பினும் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்றார்.
குண்டுவெடிப்பால், ஸ்டேடியத்தின் சுவர் சேதமடைந்துள்ளது. அங்கு கிடக்கும் சிதறல்களை வெடிகுண்டு நிபுணர்கள் சேகரித்து சோதனையை தொடங்கியுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது ஸ்டேடியத்திற்குள் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் இருந்தனர். குண்டுவெடிப்புக்குப் பின்னரும் அனைவரும் ஸ்டேடியத்திற்குள்ளேயே அமர வைக்கப்பட்டனர்.
குண்டுகள் வெடித்தவுடன் இரு அணிகளின் வீரர்களும், டிரஸ்ஸிங் ரூமிலேயே இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். போலீஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டு ஸ்டேடியம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் தீவிர சோதனை நடந்தது.
முன்னதாக டிரான்ஸ்பார்மர் வெடித்ததாகவும், ஜெனரேட்டர் அதிக சூடாகி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. பின்னரே இவை குண்டு வெடிப்புகள் என்று தெரியவந்தது.
இன்று மாலை 4 மணிக்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்குவதாக இருந்தது. இருப்பினும் குண்டுவெடிப்பு காரணமாக ஒரு மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு ஐந்து மணிக்குத் தொடங்குகிறது.
பெங்களூர் அணி டாஸ் வென்றுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications