இடி, மின்னலுடன் மழை - 100 இலவச டிவிக்கள் எரிந்து நாசம்
சுரண்டை: சுரண்டை பகுதியி்ல் திடீரென இடி, மின்னல் ஏற்பட்டதால் 100 இலவச டிவிக்கள் எரிந்து நாசமாயின.
சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சுந்தரபாண்டியபுரம், கட்டான்குளம், திருசிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென இடி, மின்னல் இடித்தது. இதில் அப்பகுதியில் உள்ள சூடாமணி, கணபதி, மாரி, நயினார், துரைராஜ், பேச்சிமுத்து உள்பட 100க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள டிவிக்கள் வெடித்தன. மேலும் மின்விசிறி, அயர்ன் பாக்ஸ், போன்ற பொருட்களும் சேதமடைந்தன. இதில் தாட்டங்குளத்தை சேர்ந்த பேச்சிமுத்து என்பவர் மயங்கி விழுந்தார்.
வெடித்துச் சிதறிய டிவிகள் அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்பட்ட டிவிகள் ஆகும். மேலும் சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான தென்னைமரங்கள் எரிந்தன. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த இந்து துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து ஓடினர்.
சம்பவம் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர், கவுன்சிலர்கள் வெள்ளியப்பன், முப்புடாதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களுக்கு புதிய டிவி கிடைக்க பரிந்துரை செய்வதாகவும் கூறி சென்றனர். நேற்று மாலையும் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications