சென்னைக்கு விமானத்தில் வந்த அபூர்வ ரக முதலை

தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் டோமிஸ்டோமா என்ற அபூர்வ வகை முதலைகள் உள்ளன.
இந்த வகை முதலை இனம் அழிந்து வரும் நிலையில் அதைப் பாதுகாக்க உலகளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் அகமதாபாத்தில் உள்ள கமலா நேரு உயிரியல் பூங்காவில் 36 வயதான பெண் முதலை இருப்பது தெரிய வந்தது. அந்த முதலையை சென்னை முட்டுக்காட்டில் உள்ள முதலை பண்ணைக்கு கொண்டு வந்து இன விருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த முதலை நேற்று குவைத்தில் இருந்து அகமதாபாத் வழியாக வந்த ஏர் இந்தியா விமானத்தில் சென்னை கொண்டு வரப்பட்டது. பெரிய மரப் பெட்டியில் வைத்து இது பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது.
பின்னர் முட்டுக்காடு பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
85 கிலோ எடை, 8 அடி நீளம் உள்ள இந்த முதலையுடன் முட்டுக்காட்டில் உள்ள 'சைகோ' என்ற பெயரிடப்பட்ட ஆண் முதலையுடன் கூடச் செய்து இனவிருத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒரு இடத்தில் இருந்து வேறு பகுதிக்கு முதலை ஒன்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications