தீவிரவாதிகள் இந்தியாவைத் தாக்கலாம்- அமெரிக்கர்களுக்கு யு.எஸ். அரசு எச்சரிக்கை

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள சுற்றுலா வழிகாட்டி எச்சரிக்கைச் செய்தியில், இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
2010ம் ஆண்டு பிப்ரவரியில் புனேவிலும், கடந்த 2008ம் ஆண்டு நவம்பரில் மும்பையிலும் நடந்த தீவிரவாத்த் தாக்குதல்களின்போது ரயில்கள், ஹோட்டல்கள், மார்க்கெட்கள், பொது இடங்களில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவே இதுபோன்ற இடங்களுக்குச் செல்லும்போது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமெரிக்கர்கள் மற்றும் மேற்கத்திய நாட்டவர்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தும் வகையில் தீவிரமாக இருப்பதை பலமுறை தீவிரவாதிகள் நிரூபித்துள்ளனர். எனவே இந்தியாவுக்குச் செல்லும் அமெரிக்க குடிமக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications