ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகளை மாற்ற வேண்டாம்- எதியூரப்பா

Subscribe to Oneindia Tamil

Yediyruappa
பெங்களூர்: ஐபிஎல் அரை இறுதிப் போட்டிகளை பெங்களூரிலிருந்து மாற்ற வேண்டாம். பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று ஐபிஎல் நிர்வாகத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெறுவதாக இருந்த அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றி விட்டது ஐபிஎல் நிர்வாகம்.

இதனால் கர்நாடக அரசு அதிருப்தி அடைந்துள்ளது. பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி ஐபிஎல் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார்.

இந்த நிலையில், போட்டிகளை மாற்றக் கூடாது என்று முதல்வர் எதியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். எனவே அரை இறுதிப் போட்டிகளை பெங்களூரிலிருந்து மாற்றக் கூடாது என்று கோரியுள்ளார்.

ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பெங்களூரில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறுவதாக இருந்த்து குறிப்பிடத்தக்கது.

பெங்களூர் கமிஷனர் பாய்ச்சல்

இதற்கிடையே, ஐபிஎல் முடிவுக்கு பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர் பித்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த முடிவு நியாயமற்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் தனது முடிவை திரும்ப்ப் பெறாவிட்டால் அது மிகப் பெரிய தவறாக அமைந்து விடும். அரை இறுதிப் போட்டிகளுக்குப் பாதுகாப்பு தர இயலாது என்று நாங்கள் கூறியதாக ஐபிஎல் கூறியிருப்பது தவறானது, அடிப்படை இல்லாதது. நாங்கள் ஒருபோதும் அவ்வாறு கூறியதில்லை.

அரை இறுதிப் போட்டிகளுக்கு முழு அளவில் பாதுகாப்பு தருகிறோம் என்றுதான் நாங்கள் கூறியிருந்தோம். இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் ராஜீவ் சுக்லா கூறியிருப்பது தவறானதாகும் என்றார் பித்ரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+