சென்னையில் நமல் ராஜபக்சே - கொதித்தெழுந்த தொண்டர்கள் கைது

தமிழ் இனப்படுகொலை செய்தவர் என சர்வதேச சமூகத்தால் விமர்சிக்கப்படும் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே நேற்று இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளார்.
அதுவும், பொழுதுபோக்கு காரணத்துக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிப்பதற்காக இந்தியாவுக்கு நமல் ராஜபக்சே வந்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்னை வந்த போது, மனிதாபிமான உணர்வு சிறிதும் இல்லாமல் அவரை திருப்பி அனுப்பினர் அதிகாரிகள்.
இவ்விவகாரம் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நமல் ராஜபக்சே மற்றும் இலங்கை போலீஸ் அதிகாரிகள் ராஜமரியாதையோடு வந்து செல்வதை அறிந்த தமிழ் ஆர்வலர்கள் நேற்று சென்னை விமான நிலையம் முன்பு குவிந்துவிட்டனர்.
பெரியார் திராவிடக் கழக தொண்டர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சென்னை விமான நிலைய வளாகத்தில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயால் பாதிக்கப்பட்ட 80 வயது பார்வதி அம்மாளை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பி விட்டு கிரிக்கெட் போட்டி பார்க்க வந்த நமல் ராஜபக்சேவை ராஜமரியாதையுடன் அனுமதிப்பது எந்த விதத்தில் நியாயம் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், போலீசாருடன் சென்று 13 பேரை கைது செய்தார்.
இதற்கிடையே, நேற்று டெல்லி போய் சேர்ந்துவிட்டதாகவும், அங்கிருந்து, சென்னை - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications