குஜராத் கலவரம் – மோடியைத் தொடர்ந்து பிரவீன் டொகாடியாவுக்கு எஸ்ஐடி சம்மன்

Subscribe to Oneindia Tamil

Pravin Togadia
அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு தற்போது விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் பிரவீன் டொகாடியாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.

2002ல் நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணைக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ராகவன் இதன் தலைவராக இருக்கிறார்.

இந்தக் குழு கடந்த மார்ச் 27ம் தேதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை 2 கட்டமாக கிட்டத்தட்ட 10 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்தது.

தற்போது விஸ்வ இந்து பரிஷத் பொதுச் செயலாளர் டொகாடியாவையும் விசாரிக்கவுள்ளது எஸ்ஐடி. இன்று விசாரணைக்கு வருமாறு டொகாடியாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்.ஐடி தரப்பில் கூறுகையில், 2002ல் நடந்த மதக் கலவரத்தில், அரசின் செயல்பாடுகள் குறித்து டொகாடியாவிடம் விசாரித்து வாக்குமூலம் பெறப்படவுள்ளது. டொகாடியாவின் வாக்குமூலம் முக்கியமானது. காரணம், நரேந்திர மோடிக்கும், டொகாடியாவுக்கும் இப்போது சரிவரப் பேச்சுவார்த்தை இல்லை. எனவே மோடி அரசின் தவறுகள் குறித்து தனக்குத் தெரிந்த்தை டொகாடியா தெரிவிக்கலாம் என நம்புகிறோம் என்றனர்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, முன்னாள் உள்துறை அமைச்சர் கோர்தான் ஜடாபியா, முன்னாள் பாஜக தலைவர் நளின் பட் ஆகியோரை எஸ்ஐடி விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளது. இவர்கள் மூன்று பேருமே பாஜகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+