Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எரிமலை..மெல்ல மெல்ல சீராகிறது விமானப் போக்குவரத்து

Subscribe to Oneindia Tamil

Flight
லண்டன்: ஐஸ்லாந்தில் மிகப்பெரிய எரிமலை வெடித்து வானில் சாம்பல் புகை பரவியதால் உலகம் முழுவதும் ஸ்தம்பித்துப் போயிருந்த விமானப் போக்குவரத்து மெல்ல மெல்ல மீணடும் ஆரம்பித்துள்ளது.

வானில் பல கிலோ மீட்டர் உயரத்துக்கு ஐரோப்பிய நாடுகளின் மீது பரவிய இந்த சாம்பல் புகையால் கடந்த 6 நாட்களாக அமெரிக்கா, ஐரோப்பா விமானங்கள மட்டுமின்றி இந்த நாடுகளுக்குச் செல்லும் பிற நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

சுமார் 8,000 விமானங்கள் நிறுத்தப்பட்டு நாளொன்றுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பை விமான நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. லட்சக்கணக்கான பயணிகள் உலகின் பல விமான நிலையங்களிலும் தவித்து வருகின்றனர்.

இந் நிலையில் சாம்பல் புகை சற்று கலைந்ததையடுத்து சில விமானங்களை செலுத்தி சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சில நாடுகள் விமானங்கள் செல்லலாம் என்றும், சில நாடுகள் நிலைமை இன்னும் சீராகவில்லை என்றும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.

இதையடுத்து ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சில நிறுவனங்கள் தங்கள் சேவையை மீண்டும் துவக்கியுள்ளன. இன்று 30 சதவீதம் அளவுக்கு விமான போக்குவரத்து சீராகிவிட்டதாகத் தெரிகிறது.

ருமேனியா, சுவீடன், குரேசியா, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முழுமையாக விமான போக்குவரத்து தொடங்கிவிட்டது. ஆனால் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் விமான போக்குவரத்து தொடங்கவில்லை.
ஜெர்மனியில் பகல் நேரத்தில் மட்டும் விமானங்கள் இயக்கப்படுகிறது. இரவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் ஸ்காட்லாந்து உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் விமான சேவை இன்று முதல் துவங்கியுள்ளது.

நியூயார்க்கிலிருந்து பாரிசுக்கு நேற்று நள்ளிரவு விமானம் இயக்கப்பட்டது. கடந்த 6 நாட்களில் ஐரோப்பியாவுக்கு பயணமாகும் முதல் அமெரிக்க விமானம் இது.

இதற்கிடையே ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்துவிட்டு கெய்ரோ, வழியாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல ஆரம்பித்துள்ளன.


விமானங்கள் சுற்றி செல்வதால் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தவிக்கும் பயணிகளுக்கு உதவ விமான போக்குவரத்து இணை செயலாளர் தலைமையில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதலின்போது ஏற்பட்ட பாதிப்பை விட எரிமலையால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கிடையே ஐஸ்லாந்து எரிமலை மீண்டும் வெடித்து சாம்பல் தூசியை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால், இம்முறை குறைந்த அளவே சாம்பல் மண்டலம் உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+