பிரிட்ஜ் தீ பிடித்து ஏ.சி. வெடித்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் பிரிட்ஜ் தீப் பிடித்ததால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பலியாயினர்.
கிராண்ட் ரோட் ஸ்டேசன் அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 3வது மாடியில் வசித்து வந்தவர் சந்தோஷ் ஜோஷி (38). இவர் தனது மனைவி பாரதி, மகன் ரிஷிகேஷ் ஆகியோருடன் நேற்று முன் தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது பிரிட்ஜி்ல் தீப் பிடித்துக் கொண்டது.
இந்தத் தீ வயர்கள் மூலம் ஏர் கண்டிசனருக்கும் பரவியது. அதில் ஏசியின் கம்ப்ரசர் வெடித்துச் சிதறி வீடு முழுக்க தீ பரவியது. இரவு 1.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த இவர்கள் தீ பிடித்ததை உணர்ந்து எழுந்து தப்புவதற்குள் வீடு முழுவதும் தீ பரவிவிட்டது. இதில் 3 பேரும் பலியாகிவிட்டனர்.
3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டு 3 உடல்களும் காலை 4.30 மணிக்கு மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications