சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீ விபத்து-பயணிகள் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தின் அருகே பிளாஸ்டிக் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கோயிலின் அருகே கிடந்த குப்பையில் இன்று காலை தீப்பிடித்தது. இந்த தீ ஆலயத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த அலங்கார பொருட்களுக்கு பரவியது.
இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் பயந்து ஓட ஆரம்பித்தனர்.
தகவல் அறிந்து உயர் நீதிமன்ற தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன.
குப்பையில் போடப்பட்ட அணைக்காத சிகரெட் மூலமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றன்ர்.












Click it and Unblock the Notifications