இஷ்ரத் போலி என்கவுண்டர்: குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: குஜராத்தில் இளம் பெண் இஷ்ரத் ஜெஹன் உள்ளிட்ட நான்கு பேர் குஜராத் மாநில போலீஸாரால் எனகவுண்டர் என்ற பெயரில் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட் அறிக்கையை தடை செய்து, மாஜிஸ்திரேட் தமங் குறித்து கடுமயான கருத்துக்களைத் தெரிவித்த குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் கடந்த 2004ம் ஆண்டு இஷ்ரத், ஜாவேத் குலாம் முகம்மது ஷேக் உள்ளிட்ட நான்கு பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் என்று கூறி போலீஸார் வழக்கை திசை திருப்பி விட்டனர்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட அகமதாபாத் மாஜிஸ்திரேட் தமங், அனைவரும் போலீஸாரால் மிகவும் நெருக்கமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட யாருமே போலீஸாரை சுடவில்லை. அவர்கள் யாருமே தீவிரவாதிகள் இல்லை. மாறாக போலீஸாரால் கடத்திச் செல்லப்பட்டு என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியிருந்தார்.
இந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த குஜராத் அரசு உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி அறிக்கைக்கு இடைக்காலத் தடை வாங்கியது. அப்போது உத்தரவிட்ட நீதிபதி, தமங்கை கடுமையாக கண்டித்திருந்தார். மேலும் அவரது விசாரணை முறை குறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து இஷ்ரத்தின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, நிஜ்ஜார் தலைமையிலான பெஞ்ச், உயர்நீதின்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குள் போக விரும்பவில்லை என்று தெரிவித்தனர். அதேசமயம், இந்த அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் கமிட்டிக்கு தடை விதித்து விட்டனர்.ச
மேலும், போலி என்கவுண்டர் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி இஷ்ரத்தின் தாயார் தாக்கல் செய்துள்ள மனு குறித்து விசாரிக்க பெஞ்ச் ஒன்றை அமைக்கவும் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பெஞ்ச் விசாரணையை முடிக்கும் வரை மாஜிஸ்திரேட் அறிக்கை குறித்து உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மாஜிஸ்திரேட் தமங்கின் விசாரணை முறைக்கு உயர்நீதிமன்றம் தெரிவித்த கண்டனம் மற்றும் அது குறித்து விசாரிக்க உத்தரவிட்டதைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஏன் இவ்வளவு கடுமையான கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பது எங்களுக்குப் புரியவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி நடத்திய விசாரணை மிகவும் மோசமானதாக உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications