தமிழகத்துக்கு கர்நாடக நிறுவனம் 150 மெகாவாட் மின்சாரம்
பெங்களூர்: கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெஎஸ்டபிள்யூ நிறுவனம் வரும் மே மாதம் 31 வரை தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரம் வழங்கவுள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகத்தில் உள்ள ஜெ.எஸ்.டபிள்யூ. மின் உற்பத்தி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு ஒப்பந்தம் செய்தது. இதன்படி அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு மே மாதம் 31ம் தேதி வரை 300 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி, ஏப்ரல் 3ம் தேதி தமிழ்நாட்டுக்கு மின்சாரம் வழங்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து பெங்களூர் உயர் நீதின்றத்தில் கர்நாடக அரசு மனுத் தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து தென் மண்டல மின் வினியோக மையம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, ஏ.கே. கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் விசாரித்தது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கர்நாடக நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த நகலும் தாக்கல் செய்யப்பட்டது. இதை பரிசீலனை செய்த நீதிபதிகள் பெஞ்ச் தமிழ்நாட்டுக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட 300 மெகா வாட் மின்சாரத்தில், 150 மெகாவாட் மின்சாரத்தை உடனடியாக கர்நாடக மின் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும். கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, கர்நாடக அரசு ஜெ.எஸ்.டபிள்யூ. மின் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை மே மாதம் 31ம் தேதி வரை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
கர்நாடகம், தமிழ்நாடு சார்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்த வழக்குகளை வாபஸ் பெறவும் ஒப்புக் கொண்டுள்ளன.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications