கடலோரப் பகுதிகளில் கன மழை – இடி தாக்கி 3 பேர் பலி
நெல்லை: கடலோர பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய மழைக்கு 3 பேர் பலியானார்கள். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கோடை வெயிலின் தாக்கம் உச்சநிலையை அடைந்துள்ளது. அதே சமயம் வடமாநிலங்களிலும், தென்மாநிலங்களான தமிழகம், கேரளாவிலும் ஆங்கங்கே கோடை வெயிலின் கொடூர தாக்கத்தை தணிக்கும் விதமாக இடியுடன் கூடிய பலத்த மழை ஆங்காங்கே பெய்து வருகிறது.
நேற்று நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதில் வடக்கு விஜயநாராயணம் பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் வயலுககு பம்பு செட் மூலம் நீர் இறைத்து விட்டு வீடு திரும்பிய தெம்பை நாடார் என்பவரும், அதே பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்த மகாலிங்கம் என்பவரும் இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் பெரிங்கோம் பகுதியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர். திடீரென பயங்கர இடியுடன் கூடிய மழை பெய்தது.
இதில் இடிதாக்கி உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ்குமார் என்ற வீரர் உடல் கருகி இறந்தார். மேலும் இவரோடு பயிற்சியில் இருந்த 13 பேர் தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் உடல் கருகி கவலைக்கிடமான முறையில் கண்ணூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் கருகி இறந்த உ.பி வீரர் உடல் இன்று உ.பிக்கு செல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications