கண்ட்ரோலர்கள் ஸ்டிரைக்-மே 1ம் தேதி ரயில்கள் ஓடுமா?

அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் (தெற்கு ரெயில்வே) ரமேஷ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நாடு முழுவதும் தினமும் 9,500 பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களும், 6500 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
ரயில்களை இயக்குவதிலும், பயணிகள் பாதுகாப்பு பணியிலும் ரயில் கண்ட்ரோலர்களாகிய நாங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறோம். ரயில் நிலைய மாஸ்டர்களுக்கு நாங்கள் தரும் தகவல்களை வைத்துத் தான் ரயில்கள் குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகின்றன.
தினமும் 35,000 ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும், 55,000 ரயில் என்ஜின் டிரைவர்களுக்கும், 50,000 உதவி டிரைவர்களுக்கும், 40,000 கார்டுகளுக்கும் ரயில்களை இயக்குவதற்கு வழிகாட்டுகிறோம்.
ரயில்வே கால அட்டவணையை தயாரிப்பதும் கண்ட்ரோலர்கள் தான். வருடம் 365 நாட்களும் இரவும், பகலுமாக ஓய்வின்றி உழைக்கும் எங்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. கேட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படவில்லை.
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாட்டை களைதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மனஅழுத்தப் படி, விபத்து சீரமைப்பு பணிக்கான படி, ஒலிபெருக்கிப் படி, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குதல், ரயில் கட்டுப்பாட்டுப் பணிக்காக தனித்துறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச உழைப்பாளர் தினமான வரும் மே 1ம் தேதி மட்டும் அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்த விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையாளரிடம் தெரிவித்து விட்டோம். அவர் எங்களை 26ம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அன்றைய தினம் எங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம்.
இல்லாவிட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இதனால் அன்று நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது. ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். இந்த நிலையை தடுக்க ரயில்வே நிர்வாகம் தான் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications