கண்ட்ரோலர்கள் ஸ்டிரைக்-மே 1ம் தேதி ரயில்கள் ஓடுமா?

அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் (தெற்கு ரெயில்வே) ரமேஷ் சென்னையில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
நாடு முழுவதும் தினமும் 9,500 பயணிகள், எக்ஸ்பிரஸ் மற்றும் புறநகர் ரயில்களும், 6500 சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 30 லட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர்.
ரயில்களை இயக்குவதிலும், பயணிகள் பாதுகாப்பு பணியிலும் ரயில் கண்ட்ரோலர்களாகிய நாங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறோம். ரயில் நிலைய மாஸ்டர்களுக்கு நாங்கள் தரும் தகவல்களை வைத்துத் தான் ரயில்கள் குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுகின்றன.
தினமும் 35,000 ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கும், 55,000 ரயில் என்ஜின் டிரைவர்களுக்கும், 50,000 உதவி டிரைவர்களுக்கும், 40,000 கார்டுகளுக்கும் ரயில்களை இயக்குவதற்கு வழிகாட்டுகிறோம்.
ரயில்வே கால அட்டவணையை தயாரிப்பதும் கண்ட்ரோலர்கள் தான். வருடம் 365 நாட்களும் இரவும், பகலுமாக ஓய்வின்றி உழைக்கும் எங்களுக்கு உரிய ஊதியம் தரப்படுவதில்லை. கேட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படவில்லை.
ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாட்டை களைதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், மனஅழுத்தப் படி, விபத்து சீரமைப்பு பணிக்கான படி, ஒலிபெருக்கிப் படி, வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குதல், ரயில் கட்டுப்பாட்டுப் பணிக்காக தனித்துறை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச உழைப்பாளர் தினமான வரும் மே 1ம் தேதி மட்டும் அகில இந்திய ரயில் கண்ட்ரோலர்கள் சங்கத்தில் உள்ள அனைவரும் ஒட்டுமொத்த விடுமுறை எடுத்து போராட்டம் நடத்த உள்ளோம்.
இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையாளரிடம் தெரிவித்து விட்டோம். அவர் எங்களை 26ம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அன்றைய தினம் எங்களது நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் போராட்டத்தை வாபஸ் பெறுவோம்.
இல்லாவிட்டால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும். இதனால் அன்று நாடு முழுவதும் ரயில்கள் ஓடாது. ரயில்வே துறைக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். பயணிகள் பெரும் இன்னலுக்கு ஆளாவார்கள். இந்த நிலையை தடுக்க ரயில்வே நிர்வாகம் தான் நடவடிக்கை எடு்க்க வேண்டும் என்றார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications