நித்தியானந்தாவை விசாரிக்க சென்னை போலீஸ் படை பெங்களூர் விரைந்தது
Subscribe to Oneindia Tamil

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் வைத்து கைது செய்ய்ப்பட்ட நித்தியானந்தா பெங்களூர போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார். அவரை விசாரிக்க சென்னை போலீஸாரும் முடிவு செய்துள்ளனர்.
நித்தியானந்தா மீது சென்னையில் 420 வழக்குப பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நித்தியானந்தாவை விசாரிக்க உதவி கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தனிப்படையினர் நேற்று இரவு பெங்களூர் புறப்பட்டு சென்றனர்.
இதற்கிடையே, சென்னைக்கு வரும் நேரங்களில் பாத பூஜை என்ற பெயரில் நித்தியானந்தா பல கோடிகளை சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.












Click it and Unblock the Notifications