சாத்தான்குளம்: காங்கிரஸ்-இந்து முன்னணி மோதல்
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரை கண்டித்து ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் பொன்.சுப்பையா, என்பவர் நோட்டீஸ் ஒட்டினார்.
அதை திருவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் இணை ச்செயலாளர் நெடுங்குளம் முரசொலி மாறன், அவரது தந்தை, ஞானையா உள்பட 4 பேர் கிழித்து எறிந்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் தகராறு ஏற்படவே பொன்.சுப்பையா தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி காங்கிரஸ் பிரமுகர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இந் நிலையில் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நகரத் தலைவர் ஜோசப் அலெக்ஸ் போலீசில் கொடுத்த புகாரில், தன்னை ஒன்றிய இந்து முன்னணிச் செயலாளர் பரமசிவன், ஒன்றியச் செயலாளர் பொன்.சுப்பையா, இந்து முன்னணி பொதுசெயலாளர் சக்திவேல் ஆகியோர் தாக்கியதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.