புற்று நோய்க்குப் பயன்படுத்தப்படும் அல்புபாக்ஸ் தரம் குறைந்தது – அரசு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மார்பகப் புற்று நோய்க்குப் பயன்படுத்தப்படும் அல்புபாக்ஸ் என்ற மருந்து தரம் குறைந்ததாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில் சில பொருட்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கும் மேலாக இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள மத்திய மருந்து ஆய்வகம் அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில், தரமான மருந்தாக இதை இனியும் கருத முடியாது. இந்த மருந்தில், என்டோடாக்சின் அளவு அதிமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அல்புபாக்ஸ் தரம் குறைந்த மருந்தாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அப்ராக்ஸே என்ற பெயரில் இந்த மருந்து விற்கப்படுகிறது. இதுதான் இந்தியாவில் அல்புபாக்ஸ் என்ற பெயரில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications