அனைவருக்கும் கல்வி கணக்கெடுப்பு - பள்ளி செல்லா குழந்தைகள் 2500 பேர் கண்டுபிடிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கணக்கெடுப்பு நடத்தி பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகள் சுமார் 2500 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களை முறையான பள்ளிகளில் சேர்த்து கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி அளிக்கும் மத்திய அரசின் சட்டம் ஏப் 1ல் அமுலுக்கு வந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் 1 கோடி குழந்தைகள் பயன் பெறுவார்கள். இதற்காக 14 வயது வரை உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஏப் 5ல் கணக்கெடுப்பு பணி துவங்கியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 21 ஒன்றியங்களையும் 4 மண்டலங்களாக பிரித்து தலா 80 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவிற்கு 2 பேர் வீதம் 40 குழுக்களாக பிரிந்து கணக்கெடுப்பு பணி நடந்தது. ஆசிரியர் பயிற்றுனர்கள், கல்வி தன்னார்வளர்கள், அங்கான்வாடி பணியாளர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர்.
ஒவ்வொரு குழுவும் நாள் ஒன்றுக்கு 5 பள்ளிகள் வீதம் அங்குள்ள தொடக்க கல்வி பதிவேட்டில் இடம் பெற்றுள்ள குழந்தைகளின் விவரப்பட்டியலை சேகரித்து அதன் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்கலிலும் ஏறக்குறைய 2500 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications