சென்னை விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவிய தொழிலாளி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்த உதவிய சரக்குத் தொழிலாளி கைது செயயப்பட்டார்.
அவரிடம் தங்கத்தைத் தந்து கடத்தச் சொன்ன விமானப் பயணி தப்பிவிட்டார்.
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஏர்- இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னை வந்தது.
இந்த விமானம் வந்திறங்கிய சிறிது நேரத்தில் ஒரு வாலிபர் குடியுரிமை பிரிவு கவுண்டர் அருகே வந்து நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தார்.
இதையடுத்து சந்தேகமடைந்த குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் அவரை விசாரித்தபோது அவரது பெயர் கணேசன் (38) என்றும் தனியார் விமான நிறுவனத்தில் சரக்கு ஏற்றும் தொழிலாளியாக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
அவரை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் 2.5 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள், நகைகள் இருந்தன. அதன் மதிப்பு ரூ. 40 லட்சமாகும்.
அவரிடம் விசாரி்த்தபோது, சிங்கப்பூர் விமானத்தில் வந்த ஒரு பயணி விமானத்துக்குள் வைத்து இதை தன்னிடம் தந்ததாகவும், வெளியில் கொண்டு வந்து தந்தால் ரூ.20,000 தருவதாகக் கூறியதாகவும், அவருக்காக காத்திருந்தபோது பிடிபட்டுவிட்டதாகவும் கூறினார்.
இதையடுத்து தங்கம் கடத்த உதவிய குற்றத்துக்காக கணேசன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தங்கத்தை கொடுத்த பயணி தப்பிவிட்டார். அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications