For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக எம்எல்ஏ அறையில் சட்டக் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி

Google Oneindia Tamil News

சென்னை: எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏவின் அறையில் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

அரியலூர் மாவட்டம் பூவட்ட கோவில் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (27), சென்னை சட்டக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறையில் தங்கி இருந்தார்.

இந் நிலையில் பாஸ்கர் இன்று காலை அந்த அறையில் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். இதைப் பார்த்து விடுதி ஊழியர்கள் அரசினர் தோட்ட போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து சென்று பாஸ்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X