ராஜபக்சே சிபாரிசில் டெண்டுல்கருக்கு கொழும்பு விமான நிலையத்தில் சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

Sachin with Lankan Doctor
கொழும்பு:தமிழகத்தைத் தவிர இந்தியாவின் பிற பகுதியினர் முழுவதும் தன் பக்கமே இருப்பது போல காட்டிக் கொள்ள முனையும் ராஜபக்சே நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரையும் தனது பாலிட்டிக்ஸ் வலையில் வீழ்த்தியுள்ளார். அவரை கொழும்புக்கு வரவழைத்து தனது பெர்சனல் டாக்டர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டிகள் நடந்துகொண்டிருந்தபோது, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட டெண்டுல்கர் ஏப்ரல் 23ம் தேதி திடீரென கொழும்புக்குச் சென்றார். அவருக்கு கொழும்பு கட்டுநாயகா விமான நிலையத்தில் வைத்து டாக்டர் எலியந்தா ஒயிட் என்பவர் சிகிச்சை அளித்தார்.

ராஜபக்சேவின் சிபாரிசின் பேரில்தான் இந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்., ஐபிஎல் அரை இறுதிப் போட்டியின்போது சச்சினின் விரலில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்குத்தான் கொழும்பு சென்று சிகிச்சை பெற்றுள்ளார் டெண்டுல்கர்.

இந்த சிகிச்சையை முடித்துக் கொண்டு டெண்டுல்கர் மீண்டும் மும்பை விரைந்துள்ளார். அதன் பின்னர் சென்னை அணியுடனான இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.

டாக்டர் எலியந்தா ராஜபக்சேவின் பெர்சனல் டாக்டராம். சமீபகாலமாக இவரை வைத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலருக்கு சிகிச்சை அளிக்கும் சைடு பிசினஸில் இறங்கியுள்ளார் ராஜபக்சே.

முன்பு கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்க ஏற்பாடு செய்தார் ராஜபக்சே. இதுஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடும் கோபத்தை சம்பாதித்தது.

இந்த நிலையில் தற்போது டெண்டுல்கரை வரவழைத்து சிகிச்சை கொடுத்து அனுப்பியுள்ளார் ராஜபக்சே என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+