14 வயது சிறுமி கற்பழிப்பு - இலங்கையில் சீனர் கைது
கொழும்பு: 14 வயது சிறுமியைக் கற்பழித்ததாக சீன நாட்டவர் ஒருவர் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபருக்கு வயது 36 ஆகும்.
இலங்கையின் வட மேற்கில் உள்ள நொரச்சோலை நிலக்கரி மின்நிலைய அமைப்புப் பணியில் சீனர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சீனரும் அங்குதான் பணியாற்றி வருகிறார். எலக்ட்ரீஷியனாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அப்பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமியை லாரி ஒன்றுக்கு அழைத்துச்சென்று அங்கு வைத்து இந்த நபர் கற்பழித்துள்ளார். இதையடுத்து அந்த சீனரை போலீஸார் கைது செய்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி கூறுகிறது.
நொரச்சோலையில், 300 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இதில் பெருமளவிலான சீனர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிவடைந்து விட்டதாக கூறிய இலங்கை அரசு, சீனா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தனது அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. குறிப்பாக சீனர்களை வைத்து பல வேலைகளை அது செய்து வருகிறது.
இந்த நிலையில் சீனர் ஒருவர் கற்பழிப்பு புகாரில் சிக்கி கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications