For Daily Alerts
Just In
தோல் ஆலையில் விஷவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் பலி
வாணியம்பாடி: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் கழிவு நீர்த் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
ஜிலானி தோல் தொழிற்சாலையில் இந்த சம்பவம் நடந்தது.
இதில் சூரியமூர்த்தி (59) சரவணன் (30) செங்கல் வராயன் (37), ஏழுமலை (35), ராமு (32) ஆகிய 5 தொழிலாளர்கள் பலியாயினர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்டுபுப் படையினர் விரைந்து சென்று அந்த 5 தொழிலாளர்களது உடல்களை மீட்டனர்.
மாவட்ட வருவாய் அதிகாரி சரவண வேல்ராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.
Comments
Story first published: Saturday, May 1, 2010, 14:05 [IST]