ரயில், பஸ்களி்ல் முன் பதிவு டிக்கெட்டுகள் காலி: சென்னை-நெல்லைக்கு 40 சிறப்பு பஸ்கள்
நெல்லை: கோடை விடுமுறையை ஓட்டி சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயி்ல்களிலும் முன் பதிவு டிக்கெட்கள் காலியாகி விட்டன.
இதனால் தட்கல் டிக்கெட்டுகளையே மக்கள் நம்பியுள்ளனர்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் நெல்லை, சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரயில்கள், பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதி வருகிறது.
ரயில்களில் டிக்கெட்டுகள் காலியாகி விட்டதை போல அரசு பஸ்களிலும் ஒரு மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.
இதனால் பயணிகள் வசதிக்காக கோடைகால சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து 40 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்படுவதாக பொது மேலாளர் முருகன் தெரிவித்தார்.
மேலும் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசு அதைச் செய்தால் புண்ணியமாக இருக்கும்...!












Click it and Unblock the Notifications