தீர்ப்புக்கு முன்பு சிறை அறையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த கசாப்
Subscribe to Oneindia Tamil

இன்று மும்பை தனி கோர்ட்டில் நீதிபதி தஹிளியானி தீர்ப்பை அளித்தார். அப்போது, கசாப் குற்றவாளி என்று நீதிபதி கூறியபோது, அதைக் கேட்ட கசாப் பெரிய அளவில் எந்தவித உணர்ச்சியையும் காட்டவில்லை. மாறாக சாதாரண முறையில், சலனமில்லாமல் தீர்ப்பை கேட்டுக் கொண்டான்.
அதை விட, தீர்ப்புக்காக நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு, தனது அறையில் இருந்தபோது ஜான் ஜானி ஜனார்த்தன் என்ற பழைய இந்திப் பாட்டை பாடிக் கொண்டிருந்தாம் கசாப். அதிலும் அவனை அழைத்துச் செல்வதற்காக சிறை வார்டர்கள் அருகில் வந்தபோது சத்தத்தைக் கூட்டிப் பாடியுள்ளான் கசாப்.
கசாப் கிராமத்தில் மக்கள் கூட்டம்:
இதற்கிடையே, கசாப்பின் சொந்த ஊரான, பாகிஸ்தானின் பரீத்கோட் கிராமத்தில், டிவிகளின் முன் மக்கள் பெருமளவில் கூடி தீர்ப்பைக் கேட்க காத்திருந்தனர்.












Click it and Unblock the Notifications