திருமாவளவனை உடனடியாக் கைது செய்ய வேண்டும்- முக்குலத்தோர் பேரவை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி மன்னார்குடியில் அம்பேத்கர் அறிவாலயம் மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்கு திருமாவளவன் வருகை தந்தார். பின்னர் விழா முடிந்ததும், பரவாகோட்டை கிராமத்துக்கு கொடியேற்று விழாவுக்கு சென்றபோது, இரவு 10.30 மணிக்கு, கொடியேற்றும் முன்பாகவே தாக்கப்பட்டார்.
மறைந்திருந்து கல்வீசி தாக்கியதில் திருமாவளவனின் கார் கண்ணாடி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஆனந்த் என்பவரின் கால் முறிந்தது. இதையடுத்து பல கார்களும் நிறுத்தப்பட்டது.
இதனால் 30ஆம் தேதி பேருந்து மறியல், பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர்.
திருமாவளவன் கார் மீது கல் வீசியதாக பரவாக்கோட்டையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 11 பேரை கைது செய்ததை கண்டித்து முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை தலைவர் செங்கூட்டுவன் வாண்டையார் தலைமையில் மன்னார்குடி நெடுவார்கோட்டையில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர்.
அங்கு டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் வந்த காவல்துறையினர், முன் அறிவிப்பு இல்லாமல் பேருந்து மறியல் செய்யக்கூடாது என்று தடுத்ததின்பேரில், முக்குலத்தோர் பாதுகாப்பு பேரûவை சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அதில், தலித் அல்லாதவர்களை திருமாவளவன் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் அல்லாதவர்கள் மீது தலித்துகள் கொடுக்கும் புகார்களை தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரமும் செய்யப்பட்டது. திருமாவளவன் கைது செய்யப்படாத பட்சத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலித் இல்லாத மக்களை இணைத்துக்கொண்டு சாலை மறியலில் செய்ய தயாராகுவோம் என்றும் பேரவை அறிவித்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications