திருமாவளவனை உடனடியாக் கைது செய்ய வேண்டும்- முக்குலத்தோர் பேரவை
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி மன்னார்குடியில் அம்பேத்கர் அறிவாலயம் மற்றும் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவுக்கு திருமாவளவன் வருகை தந்தார். பின்னர் விழா முடிந்ததும், பரவாகோட்டை கிராமத்துக்கு கொடியேற்று விழாவுக்கு சென்றபோது, இரவு 10.30 மணிக்கு, கொடியேற்றும் முன்பாகவே தாக்கப்பட்டார்.
மறைந்திருந்து கல்வீசி தாக்கியதில் திருமாவளவனின் கார் கண்ணாடி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஆனந்த் என்பவரின் கால் முறிந்தது. இதையடுத்து பல கார்களும் நிறுத்தப்பட்டது.
இதனால் 30ஆம் தேதி பேருந்து மறியல், பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்டனர்.
திருமாவளவன் கார் மீது கல் வீசியதாக பரவாக்கோட்டையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 11 பேரை கைது செய்ததை கண்டித்து முக்குலத்தோர் பாதுகாப்பு பேரவை தலைவர் செங்கூட்டுவன் வாண்டையார் தலைமையில் மன்னார்குடி நெடுவார்கோட்டையில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர்.
அங்கு டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் வந்த காவல்துறையினர், முன் அறிவிப்பு இல்லாமல் பேருந்து மறியல் செய்யக்கூடாது என்று தடுத்ததின்பேரில், முக்குலத்தோர் பாதுகாப்பு பேரûவை சார்பில் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அதில், தலித் அல்லாதவர்களை திருமாவளவன் அவதூறாக பேசியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலித் அல்லாதவர்கள் மீது தலித்துகள் கொடுக்கும் புகார்களை தலித் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை பிரச்சாரமும் செய்யப்பட்டது. திருமாவளவன் கைது செய்யப்படாத பட்சத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலித் இல்லாத மக்களை இணைத்துக்கொண்டு சாலை மறியலில் செய்ய தயாராகுவோம் என்றும் பேரவை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications