For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை பத்திரிக்கையாளர் திஸ்ஸநாயகத்திற்கு பொதுமன்னிப்பு- ராஜபக்சே

Google Oneindia Tamil News

கொழும்பு: ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போர்க் காலத்தில் கட்டுரைகள் எழுதியதாக, சன்டே டைம்ஸ் பத்திரிகையி்ன் சிறப்புச் செய்தியாளர் திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டார். கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு சமீபத்தில்தான் ஜாமீன் வழங்கப்பட்டது.

இன்று சர்வதேச ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சே அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, திஸ்ஸநாயகத்துக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடகவிலயாளருக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலிலிருந்து விடுபடும் ஒரு முயற்சியாகவே திஸ்ஸநாயகத்தை விடுவிக்கிறது இலங்கை என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். அதேநேரம், திஸ்ஸநாயகம் விடுதலையாவதை வரவேற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X