இந்தியாவுக்குள் 140 அல்கொய்தா தீவிரவாதிகள் ஊடுறுவியுள்ளனர் - உளவுத்துறை

இந்த தீவிரவாதிகள் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் எச்சரித்துள்ளது. நாட்டின் மேற்குக் கடற்கரை வழியாக இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது.
ஏற்கனவே லஷ்கர் இ தொய்பாவும், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களும் இந்தியாவில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் இருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அல்கொய்தா தீவிரவாதிகள் பெருமளவில் ஊடுறுவியிருப்பதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து மத்திய உள்துறை தீவிரவாதிகளின் இலக்காக இருக்கலாம் என கருதப்படும் மாநிலங்களை எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்குள் ஊடுறுவியுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் இலங்கை மீன் பிடி படகுகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கடற்படையோ, இத்தனை பேர் கடல் மார்க்கமாக, அதுவும் வெளிநாட்டு மீன் பிடி படகுகள் மூலமாக ஊடுறுவ வாய்ப்பே இல்லை என்று கடற்படையினர் மறுத்துள்ளனர்.
ஆனால் அஸ்ஸாம் உளவுப்படையினர் இந்தஊடுறுவல் தொடர்பாக பல விரிவான தகவல்களை உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குஜராத்- மகாராஷ்டிரா கடற்கரை வழியாகவே தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் பிரிந்து போயிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இவர்களில் 30 பேர் ராஜஸ்தானுக்கும், உ.பிக்கு 14 பேரும், 15 முதல் 20 பேர் ஹைதராபாத்துக்கும், 12 பேர் மகாராஷ்டிராவுக்கும் போயிருப்பதாகவும் அஸ்ஸாம் உளவுத் தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 40 பேர் தென்மாநிலங்களுக்கு ஊடுறுவியிருப்பதாகவும், ஐந்து பேர் டெல்லி, ஹரியாணாவுக்குப் போயிருப்பதாகவும் அத்தகவல் மேலும் கூறுகிறது.
இவர்களில் சிலர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications