சென்னையில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை இயக்க ஓ.பன்னீர்செல்வம் யோசனை

Subscribe to Oneindia Tamil

Pannerselvam
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயர்ந்திருப்பதால் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை இயக்கலாம் என்று அரசுக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் யோசனை தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்விநேரத்தின்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணம் அதிகரித்திருப்பதால் சென்னையில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகள் இயக்கப்படுமா? என்று கேட்டார்.

அதற்கு போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு பதிலளிக்கையில்,

எத்தனை முறை சொன்னாலும் பஸ் கட்டணம் உயர்ந்து விட்டதாகவே அதிமுக உறுப்பினர் கூறுகிறார். இப்போதும் சொல்கிறேன் அதிமுக ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட பஸ் கட்டணம்தான் இப்போதும் வசூலிக்கப்படுகிறது. எந்தவித கட்டண உயர்வும் இல்லை.

இங்கு நாள் ஒன்றிற்கு சராசரியாக 3, 825 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதனால்தான் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

பெட்ரோல், டீசலுக்கு முழு தட்டுப்பாடு ஏற்பட்டு அவை கிடைக்கவில்லை என்றால் அப்போது குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+