கோர்ட்டில் ரூ. 100 அபராதம் கட்டிய அன்னா ஹசாரே
Subscribe to Oneindia Tamil
புனே: பிரபல சமூக சேவகரும், ஊழல் எதிர்ப்புப் போராளியுமான அன்னா ஹசாரே கோர்ட் வாய்தாவுக்கு வராததால், ரூ. 100 அபராதம் கட்டியுள்ளார்.
ஒரு வழக்கில் மார்ச் 15ம் தேதி ஹசாரே நேரில் ஆஜராகுமாறு புனே நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் நேற்று நீதிபதி வானவாதி முன்னிலையில் அவர் ஆஜரானார். அப்போது கோர்ட் சம்மனை ஏற்று மார்ச் 15ம்தேதி ஹசாரே கோர்ட்டுக்கு வராததால், அவருக்கு நீதிபதி ரூ. 100 அபராதம் விதித்தார். இதை ஹசாரே உடனடியாக் கட்டினார்.
அறக்கட்டளை நிதியை முறைகேடு செய்த்தாக ஹசாரே மீது கடந்த 2005ம் ஆண்டு ஹேமந்த் பாட்டீல் என்பவர் வழக்குதொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு வராத காரணத்தால்தான் ஹசாரேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications