திருமணத்திற்காக மட்டும் இஸ்லாமுக்கு மாறுவது மத விரோதம்- தார் உல் உலூம் தியோபான்ட்
முஸாபர்நகர்: திருமணத்திற்காக மட்டும் இஸ்லாமைத் தழுவுவது மத விரோதமாகும் என்று இஸ்லாமிய மத அமைப்பான தார் உல் உலூம் தியோபான்ட் கூறியுள்ளது.
உ.பியைச் சேர்ந்த 82 வயது ஓம் பிரகாஷ் என்ற சுதந்திரப் போராட்ட வீர்ரும், 50 வயதான காஸியா பேகம் என்ற பெண்ணும் திருமணப் பதிவாளர் அலுவலகத்தில் தாங்கள் திருமணம் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.
இதற்கு பிரகாஷின் இரு மகன்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தான் காஸியாவை திருமணம் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவக்கப்பட்டால், முஸ்லீமாக மாற தயங்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தியாபான்ட் அமைப்பு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தியோபான்ட் அமைப்பின் பாத்வா பிரிவு துணைத் தலைவர் முப்தி அசன் காஸ்மி கூறுகையில், திருமணம் செய்வதற்காக ஒருவர் இஸ்லாமுக்கு மாறுவது என்பது ஷரியத்துக்கு எதிரானதாகும். இது இஸ்லாம் விரோத செயலுமாகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications