எண்ணெய் நிறுவனங்களுக்கு மேலும் ரூ 14 ஆயிரம் கோடி உதவி

இந்த நிறுவனங்கள் பெட்ரோல், டீஸல், கெரோஸின் மற்றும் சமையல் எரிவாயுவை மானிய விலைக்கு விற்று வருவதாகவும் இதனால் ரூ 31, 621 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட பெட்ரோலியப் பொருள்களுக்கு மேலும் விலை உயர்த்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றன எண்ணெய் நிறுவனங்கள். அல்லது உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.
இந்தக் கோரிக்கையை ஏற்று ஏற்கெனவே ரூ 12000 கோடியை முதல்கட்ட உதவித் தொகையாக மத்திய அரசு அறிவித்தது. இப்போது மேலும் ரூ 14000 கோடி ரொக்க நிதி உதவியை நேற்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், "நாங்கள் ரூ 19620 கோடி கேட்டிருந்தோம். ஆனால் நிதித்துறை ரூ 14000 கோடிதான் ததந்துள்ளது..." என்றார்.
கச்சா எண்ணெய் கொள்முதல் விலையை விட குறைவான விலைக்கு பெட்ரோல், டீஸல், கெரோஸின் விற்கப்படுவதால் 2009-2010 ஆண்டில் மட்டும் ரூ 46,051கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதைத் தவிர்க்க, பெட்ரோலியப் பொருள்களுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் தங்களுக்கே வேண்டும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் கோரி வருகின்றன.
இதுகுறித்து முடிவு செய்ய அடுத்தவாரம் மத்திய அமைச்சர்கள் குழு கூடுகிறது












Click it and Unblock the Notifications