தமிழ் யூனிகோட் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக தமிழக அரசு அங்கீகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: யூனிகோட் தமிழ் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா சட்டசபையில் தெரிவிக்கையில்,

தமிழக அரசு தகவல்தொடர்பு பாதுகாப்பு கொள்கை, மின் ஆளுமைக் கொள்கை, மின் குப்பை கொள்கை உள்ளிட்டவை குறித்து திட்டமிட்டு வருகிறது. விரைவில் இவை வெளியிடப்படும்.

முதல் படியாக அனைத்து அரசுத் துறைகளும் மூன்று ஆண்டுகளுக்கான மின் ஆளுமைத் திட்டத்தை தீட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படும்.

தற்போது தமிழில் ஏராளமா எழுத்துருக்கள் பயந்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இணையத்தில் தமிழின் வளர்ச்சி குறைகிறது. எனவே தமிழை இணையத்தில் பரவலாக்கவும், விரிவுபடுத்தவும் யூனிகோட் எழுத்துருவை பொதுவான எழுத்துருவாக அங்கீகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதுத. இதன் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களால் தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் இணையதளங்கள் மூலம் எளிதில் காண முடியும்.

மேலும், விக்கிஷனரியில், சர்வதேச இணையத் தமிழ் அகாடமி உருவாக்கியுள்ள தமிழ்சொல்லகராதி இணைக்கப்படும்.

மேலும் தமிழை வளர்க்க ஆண்டுதோறும் இணையதளங்கள் மூலம் போட்டிகளைநடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+