கசாப்புடன் ஆலோசித்து அப்பீல் குறித்து முடிவு- வக்கீல்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில்மும்பை கோர்ட் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து கசாப்புடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என கசாப்பின் வழக்கறிஞர் கே.பி.பவார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நான் தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்காத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல்நீதிமன்றங்களில் அப்பீல் செய்யலாம். அவ்வளவுதான்.
கசாப்பை சந்திக்க எனக்கு வாய்ப்பு தரப்படும். அப்போது பாம்பே உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்வது குறித்து கசாப்பிடம் கேட்பேன். அதன் பின்னர் முடிவு எடுக்கப்படும்.
தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நான் கசாப்பிடம் பேச வாய்ப்பு தரப்பட்டது. நான் அவனிடம் பேசினேன். அவன் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி விட்டான் என்றார்.












Click it and Unblock the Notifications