திகார் சிறையிலும் ஊடுறுவிய செல்போன்கள் -2 ஆண்டுகளில் 9 போன்கள், 11 சிம்கள் பறிமுதல்

நாடு முழுவதும் சிறைச்சாலைகளில் செல்போன் நடமாட்டம் பெருகி வருகிறது. இந்த நிலையில் நாட்டிலேயே மிகவும் பாதுகாப்பான சிறையாக கருதப்படும் திகார் சிறையிலேயே செல்போன் நடமாட்டம் இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அங்கு நடந்த அதிரடி சோதனையில்,9 செல்போன்களும், 11 சிம்கார்டுகளும் சிக்கியுள்ன. இருப்பினும் இவற்றை கைதிகள் பயன்படுத்துவதற்கு முன்பே கண்டுபிடித்து மீட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டில் மட்டும் 4 செல்போன்களையும், ஐந்து சிம் கார்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனராம். மற்றவை கடந்த ஆண்டு சிக்கியவையாகும்.
2008ம் ஆண்டு 2 சிம்கார்டுகள் சிக்கின. இருப்பினும் போன் எதுவும் பறிமுதலாகவில்லை. 2007ல் இதுபோல எதுவும் கிடைக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளை விட இந்த ஆண்டு செல்போன்கள், சிம்கார்டுகள் ஊடுறுவல் அதிகரித்துள்ளதாக கூறும் சிறை அதிகாரிகள், இவற்றை அடியோடு தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications